×

மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 4: கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாக்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலூர் மண்டலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பிற மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெற்று உடனடி தீர்வுகாணவும், ஆலோசனை வழங்கவும், 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவின் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை வேலூர் மண்டல அலுவலக மின் வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உரிய நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, 2020ம் ஆண்டிற்கான கூட்டம் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 6ம் தேதி காலை 11 மணியளவில் வேலூர் மின் பகிர்மான வட்டம், மத்திய அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. எனவே, மின் வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலர் மற்றும் பணியாளர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Electricity pensioners ,meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...