×

பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மாயம்

தர்மபுரி, மார்ச் 4: பாலக்கோடு அருகே ஜிட்டாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த பிப்.28ம் தேதி உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அவரது டூவீலரை அருகே இருந்த ஸ்டேண்டில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் முருகேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Palakkad ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்