×

காளைகள் முட்டி 70 பேர் காயம்

லால்குடி, மார்ச் 4: லால்குடி அருகே மால்வாய் கிராமத்தில் நடந்த ஜல்லிகட்டில் காளைகள் முட்டியதில் 70 பேர் காயமடைந்தனர். லால்குடியை அடுத்த மால்வாய் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், ஆர்டிஓ ராமன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தாசில்தார் சண்முகசுந்தரி நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். டிஎஸ்பி., ராஜேசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், முத்துக்குமார் ஆகியோர் தலைைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டில் 582 காளைகளும், 221 வீரர்களும் கலந்துகொண்டனர். இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 70 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செந்தாமரைகண்ணன், பிச்சை, ராசாங்கம், மணிவேல், சேகர் மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர்.


Tags :
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...