×

ஓராண்டாக கிராம சேவை மைய கட்டிடத்தில் இயங்கும் அங்காடி

முத்துப்பேட்டை, மார்ச் 4: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மெயின் ரோட்டில் சுற்றுப்பகுதி மக்களுக்காக அங்காடி ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தினந்தோறும் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த அங்காடி கட்டிடத்தின் மேல் சிலாப் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து எந்தநேரத்திலும் விழும் அபாய நிலையில் உள்ளது. சுவர்களிலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்காடியில் இருப்பு வைத்திருந்த மக்களுக்கு வழங்கவேண்டிய பொருட்கள் மழையில் நனைந்து வீணாகியது. இதனையடுத்து இந்த அங்காடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் தினந்தோறும் இருப்பு வைக்கப்பட்டு வந்த பொருட்கள் மழைநீரில் சேதமாகி வந்தது மட்டுமல்லாமல், எலிகளின் தொந்தரவும் அதிகரித்தது. இதனையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன் இந்த அங்காடி அருகே இருக்கும் கிராம சேவை மையம் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த உப்பூர் ஊராட்சிக்கு உட்ப்பட்ட மக்களுக்கு பயன்பட்டு வந்த கிராம சேவை மையம் தடைப்பட்டது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் விரைவில் இந்த அங்காடிக்கு புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நமக்குதான் ஒரு கட்டிடம் இருகிறதே என்று இதில் அழைச்சியப்படுத்தி வருகின்றனர். அதனால் இனியும் காலதாமதப்படுத்தாமல் இங்குள்ள பழைய அங்காடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Store ,building ,Village Service Center ,
× RELATED ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே...