×

காத்திருப்பு போராட்டம் 5வது நாளாக நீடிப்பு

திருவாரூர், மார்ச் 4: மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் ஊர் ஜமாத்தார் மற்றும் முஸ்லிம்கள் அமைப்பினர் சார்பில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தினை துவங்கியுள்ள நிலையில் நேற்றும் 5வது நாளாக இந்த போராட்டமானது நடைபெற்றது.

Tags :
× RELATED பள்ளி மாணவ, மாணவிகள் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு