×

ெபரியபாளையம் அருகே 3 குடிசைகள் எரிந்து பொருட்கள் நாசம்: மின் கசிவு காரணமா?

ஊத்துக்கோட்டை, மார்ச் 4:  பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் கிராமத்தில் 3 குடிசைகள் தீயில் எரிந்து  சாம்பலானது. இதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.  பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரவி (40), குமார் (44), ஜான்சி (29). இவர்கள் கூலித்தொழிலாளர்கள்.  இவர்கள் 3 பேரின் குடிசை வீடுகளும் அருகருகில் உள்ளது.  இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென 3 வீடுகளிலும் ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டிலிருந்த அனைவரும் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் தேர்வாய் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே  அங்கு வந்த  தீயணைப்பு வீரர்கள்  சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீயால் 3 குடிசை வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பேன், டிவி,  துணிகள் ஆகியவையும் தீயில் கருகியது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.ஐ. ராக்கிகுமாரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக குடிசைகளில் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Beriyapalayam ,
× RELATED பெரியபாளையம் அருகே வடமதுரை...