புதுக்கோட்டை, மார்ச்4: புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிமுலேட்டர் கருவி பொருத்தப்பட்ட விழிப்புணர்வு வாகனம் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் ஒட்டுனர் உரிமம் பெற வந்த சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.