×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு கறம்பக்குடியில் இஸ்லாமிய பாதுகாப்பு அமைப்பு 15வது நாளாக தொடர் காத்திருப்பு ேபாராட்டம்

கறம்பக்குடி, மார்ச்4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இஸ்லாமிய பாதுகாப்பு குழு அமைப்பு சார்பாக மத்திய அரசு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கறம்பக்குடியில் 15வது நாளாக தொடர் காத்திருப்பு ேபாராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கறம்பக்குடி புளியன்சோலை பகுதி மதரஸா பள்ளி வாசல் அருகில் இஸ்லாமிய பாதுகாப்பு அமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை15வது நாளாக நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தசட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு தினம் தோறும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர் மேலும் குறிப்பாக இஸ்லாமிய அமைப்பு சார்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர் நேற்று 15வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு கறம்பக்குடி திமுகவினர் மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.நேற்று திமுக தலைமை கழக ேபச்சாளர் புதுக்கோட்டை விஜயா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

Tags : Islamist Organization ,
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்