மயிலாடுதுறை, மார்ச் 4: பாஜக நாகை வடக்கு மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜ மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் வழிகாட்டுதலின்படி நாகை வடக்கு மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட துணை தலைவர்களாக பாலு, முத்துசாமி, செந்தில்குமார், சுஜாதா, ராதாகிருஷ்ணன், துரைராஜா, மாவட்ட பொதுச்செயலாளர்களாக சந்தோஷ், செந்தில்குமார், மாவட்ட செயலாளர்களாக பன்னீர்செல்வம், ஜெயவர்த்தன், காமராஜ், ராஜசேகரன், பரணிசரவணன், மாவட்ட பொருளாளராக ராஜ்மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.