×

சீர்காழியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செயலாளர்கள் கூட்டம்

சீர்காழி,மார்ச் 4: சீர்காழியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வளர்ச்சி பணிகள் குறித்து பேசப்பட்டது. சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், ஒன்றிய பொறியாளர் தாரா, ஆடிட்டர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொறியாளர் அருமைநாதன் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அகோரம், செயலாளர் சசிகுமார், பொருளாளர் அன்புமணி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Meeting ,panchayat chiefs secretaries ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்