×

கொளப்பாடு ஊராட்சியில் 18 குடும்பத்தை சேர்ந்த அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்

கீழ்வேளூர், மார்ச் 4: கொளப்பாடு ஊராட்சியில் 18குடும்பத்தை சேர்ந்த அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கொளப்பாடு ஊராட்சி உடையான்பையூர் கிராமத்தில் அதிமுக. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி சுப்பரமணியன், ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி பெறுப்பாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான அசோக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவை சேர்ந்த ராமு, கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 18 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் மதிவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.திமுகவில் இணைந்தவர்களுக்கு இரு வண்ண கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தங்கராசு உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...