×

கம்பம் புதிய பஸ்நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தம்

கம்பம், மார்ச் 4: கம்பத்தில் உள்ள புதிய பஸ்நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் மூடிக் கிடப்பதால், வெளியூர் பயணிகள் அவதிப்படுகின்றனர். கம்பத்தில் உள்ள புதிய பஸ்நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது. இதனால், வெளியூர் பயணிகள் குறைந்த விலையில் குடிநீர் வாங்கி வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அம்மா குடிநீர் விற்பனை நிலையம் பூட்டிக் கிடப்பதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டில் பல இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக இயங்கி வந்த குடிநீர் தயாரிப்பு நிலையங்களை அரசு சீல் வைத்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வாட்டர் கேன் விற்பனையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பஸ்நிலைய கடைகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, கம்பம் புதிய பஸ்நிலையத்தில் குடிநீர் விற்பனை நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் வாட்டர் கேன் நிறுவனத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பஸ் நிலையங்களில் கடைகளில் தண்ணீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை மூடியுள்ளனர். இதனால், வெளியூர் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

Tags : Mama Drinking Water Stop ,Kambam New Bus Stand ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு