சின்னமனூர், மார்ச் 4: தேனி மாவட்ட நபார்டு வங்கி, சின்னமனூர் டி.டபிள்யூ டிரஸ்ட் சார்பில் கடமலை மயிலை, ஆண்டிபட்டி, சின்னமனூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள ஏழை, எளிய பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு
மாவட்ட நபார்டு வங்கி பொதுமேலாளர் பைஜூ என் குரூப் தலைமை வகித்தார் வகித்தார். துணை பொதுமேலாளர் மேலாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். டிரஸ்ட் செயலாளர் பரமேஸ்வரி வரவேற்றார்.
இதில் இலவம் பஞ்சு மெத்தைகள், தலையணை தயாரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க ஒரு மாத காலம் பயிற்சி இலவச வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு வருபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில், ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.