மானாமதுரை, மார்ச் 4: மானாமதுரை மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா மணிகண்டன் (28). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு தயாபுரம் அருகே ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.