×

அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி


பந்தலூர், மார்ச் 4 :  பந்தலூர் அருகே தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு  அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை எம்எல்ஏ திராவிடமணி துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், அதிமுக நகர செயலாளர் ராஜா, வழக்கறிஞர் பொன் ஜெயசீலன், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆலன், நிர்வாகிகள் ஞானசேகர், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதேபோல் பிதர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ திராவிடமணி கலந்துகொண்டு 152 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர். மேலும் உப்பட்டி பாரத்மாதா மேல்நிலைப்பள்ளியிலும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : government schools ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...