×

கள்ளர் கழகத் தேர்தல் முடிவு

உசிலம்பட்டி, மார்ச் 4: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் கள்ளர் கல்விக் கழகத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் 13 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல், முன்னாள் நீதிபதி தேர்தல் அதிகாரி பாஸ்கரன் தலைமையிலும், முன்னாள் நீதிபதிகள் பொன்னம்பலம், வினோத்குமார், கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த தேர்தல் கடந்த மார்ச் 1ம் தேதி, நடைபெற்றது. இதில் மொத்தம் 14206 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் இந்த தேர்தலில் 12722 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் வாலாந்தூர் பாண்டியன், டாக்டர் சந்திரன், பி.கே.மூக்கையாத்தேவர் மகள் ராஜேஸ்வரி என மூன்று தலைமையில் கீழ் தனித்தனிப் பிரிவுகளாக போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் மார்ச் 1ம் தேதி மாலை தேர்தல் முடிந்து அன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கை நேற்று மார்ச் 3ம் தேதி அதிகாலை வரை நடைபெற்றது.இந்த தேர்தலில் வாலாந்தூர்பாண்டியன் தலைமையிலான அணியில் தலைவராக பாலகிருஷ்ணன், செயலாளராக வாலாந்தூர்பாண்டியன், பொருளாளராக வனராஜா, ஆகியொர் வெற்றிபெற்றனர்.

இதே அணியில் செயற்குழு உறுப்பினர்களாக, போஸ், ஜெயவீரணன், குபேந்திரன், பாஸ்கரபாண்டியன், சின்னன், ஜெயபிரகாஷ், செல்வம், மொக்கச்சாமி, உதயபாஸ்கரன், திருமாவளவன், குபேந்திரன் ஆகிய 11 செயற்குழு உறுப்பினர்களும், டாக்டர் சந்திரன் அணியில் அம்மாவாசி, எம்.பி.பழனி ஆகிய 2 பேரும், மொத்தம் 13 செயற்குழு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். இதில் வாலாந்தூர் பாண்டியன் மீண்டும் வெற்றிபெற்று செயலாளர் பதவியை தக்கவைத்துள்ளார்.

Tags : election ,
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...