×

குஜிலியம்பாறை மல்லப்புரத்தில் வாரச்சந்தை திறப்பு விழா

குஜிலியம்பாறை, மார்ச். 4: குஜிலியம்பாறை அருகே மல்லப்புரத்தில் நபார்டு வங்கியின் நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பங்களிப்பு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை கட்டடிடம் புதிதாக கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்து,  வாரச்சந்தை புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில் திண்டுக்கல் நபார்டு வங்கி பொதுமேலாளர் பாலச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேந்திரன், வடுகம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சிவக்குமார், மல்லப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி செயலர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kujiliyambara Mallapuram ,
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...