×

முத்தியால்பேட்டையில் காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த பூ வியாபாரி கைது

புதுச்சேரி, மார்ச் 4: முத்தியால்பேட்டையில் காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த பூ வியாபாரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 உறவினர்களை தேடி வருகின்றனர். புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஆனந்தி (20). நர்சிங் படித்த இவரை முத்தியால்பேட்டை, மஞ்சினி நகர் மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் பெரிய மார்க்கெட் பூ வியாபாரியான கோபி(24) கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தாராம்.

அப்போது இருவரும் தனிமையில் சந்தித்த நிலையில் ஆனந்தியுடன், கோபி நெருங்கி பழகியதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆனந்தி 3 மாத கர்ப்பிணியானார். இதையடுத்து தனது காதலனின் வீட்டிற்கு சென்ற ஆனந்தி, தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு கோபியிடம் வற்புறுத்தியுள்ளார்.அதற்கு அவர் 6 மாதம் காலஅவகாசம் கேட்டு திருமணம் செய்ய மறுத்ததோடு காதலியை தனது வீட்டில் ஒரு மணிநேரமாக அடைத்து வைத்தாராம். மேலும் ஆனந்தியை அசிங்கமாக திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு கோபியின் சித்தப்பா முத்து, சண்முகம், சித்தி லதா ஆகியோரும் உடந்தையாக இருந்தார்களாம்.

இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஆனந்தி புகார் அளித்தார். தன்னை காதலித்து ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதோடு தன்னை வீட்டில் அடைத்து வைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் கோபி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

அதன்பேரில் கோபி மற்றும் உறவினர்களான முத்து, சண்முகம், லதா ஆகியோர் மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார், கோபியை கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவான 3 உறவினர்களையும் தேடி வருகின்றனர்.

Tags : florist ,Muthialpet ,lover ,
× RELATED பூக்கடை பகுதியில் அடுக்குமாடி...