தக்கலை, மார்ச்.4 : குடியுரிமை தி்ருத்த சட்டத்துக்கு ஆதரவாக இந்து முன்னணி சார்பில் பஜனை போராட்டம் தக்கலையில் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அரசு ராஜா, மாநில துணைத்தலைவர் மாயக்கூத்தன், மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், தக்கலை ஒன்றிய தலைவர் செந்தில், செயலாளர் சங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.