×

உலக செவித்திறன் நாள் பேரணி

தக்கலை, மார்ச்.4 :  தக்கலை அரசு மாவட்ட  தலைமை மருத்துவமனையில் உலக செவித்திறன் தின பேரணி நடைபெற்றது. ஒவ்வோரு  ஆண்டும் மார்ச் 3ம் தேதி உலக செவித்திறன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  இதையொட்டி தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவு  சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில்  தொடங்கிய பேரணியை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்  ராஜைய்யன் தொடங்கி  வைத்தார். இதில் ஆர்எம்ஓ டாக்டர் விஜயா, காது மூக்கு தொண்டை டாக்டர்கள்  கிரண், பினி, கேள்வியில் நிபுணர் ராஜேஷ் கண்ணா மற்றும் பயிற்சி  செவிலியர்கள் கலந்து கொண்டனர். கர்ப்பகாலத்திலே செவித்திறனை அறிந்து  கொள்தல், பச்சிளம் வயதில் செவித்திறன் பாதுகாத்தல் ஆகியன வலியுறுதப்பட்டது.  தக்கலை பஸ் நிலையம் வரை சென்ற பேரணி மீண்டும் மருத்துவமனை வளாகத்தை  வந்தடைந்தது.

Tags : rally ,World Hearing Day ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி