×

கழுகுமலையில் வியாபாரி கொலையில் கைதானவர் மீது குண்டாஸ்

கழுகுமலை, மார்ச் 4: கழுகுமலையில் பெட்டிக்கடை வியாபாரி கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி அருகே கழுகுமலையை அடுத்துள்ள கரட்டுமலையை சேர்ந்த பொன்னுப்பாண்டியன் மகன் மகேந்திரபாண்டியன் என்ற மகேந்திரன் (27). இவருக்கும், கழுகுமலை அருகே கே.ஆலங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த அழகையா மகன் அழகுராஜ் (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

கடந்த 20ம் தேதி கழுகுமலை பஜாரில் இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன், அழகுராஜாவை வெட்டி படுகொலை செய்தார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிந்து மகேந்திரனை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மகேந்திரனை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ், மாவட்ட எஸ்பி அருண்பாலகோபாலன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின்பேரில் பாளை. சிறையில் உள்ள மகேந்திரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு