×

சங்கரன்கோவில் அருகே இரு குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சங்கரன்கோவில், மார்ச் 4:   சங்கரன்கோவில் அடுத்த ஆவுடையானூரைச் சேர்ந்த  வேலுச்சாமி மகள் கவிதா (27). இவருக்கும், கீழ நீலிதநல்லூரைத் சேர்ந்தவரும், வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவருமான சங்கர் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்   திருமணமானது. தம்பதிக்கு 4 வயதில் சசி என்ற மகனும்,  2 வயதில் மனு என்ற மகளும்  உள்ளனர். கீழ நீலிதநல்லூரில் உள்ள தனது வீட்டில்  தனியாக வசித்துவந்த கவிதா, கடந்த 25ம் தேதி அக்கம்பக்கத்தாரிடம் திருச்செந்தூர் செல்வதாகக் கூறி குழந்தைகளுடன்  சென்றவர்  பின்னர் திரும்பவே இல்லை. இதுகுறித்து தெரியவந்ததும் பதறிய கவிதாவின் பெற்றோர், தோழிகள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் இல்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பனவடலிசத்திரம் போலீசார், குழந்தைகளுடன் மாயமான கவிதாவைத் தேடி வருகின்றனர்.

Tags : children ,Sankarankoil ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...