×

வாகன விபத்துகளை தடுக்க 14 இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம், மார்ச் 3: சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வந்து சென்றனர். அதன்பிறகு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் மாமல்லபுரம் வந்து செல்கின்றனர். இதில், அரசு விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் மாமல்லபுரம் நகருக்குள் வருகின்றனர். இதில், நகரப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களான பஜனை கோயில் சந்திப்பு, கங்கை கொண்டான் மண்டபம், கலங்கரை விளக்கம், இசிஆர் சாலை, மாமல்லன் சிலை சந்திப்பு, கடற்கரை கோயில் சாலை, ஐந்து ரதம், மாதா கோயில் சந்திப்பு உள்பட பல முக்கிய சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. அப்போது, விபத்துக்கள் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைகின்றனர். அதேபோல், பைக்கில் வரும் காதல் ஜோடிகளும் அதிவேகத்தில் வந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.

குறிப்பாக பஜனை கோயில் சந்திப்பு வழியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சில நேரங்களில் வாகன விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சுற்றுலா வாகனங்களும், அரசு பஸ்களும் வேக கட்டுப்பாட்டு இல்லாமல் அதிவேகத்தில் வருவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.இதனால், வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளின் 14 இடங்களில் வேகத்தடை அமைக்க முடிவு செய்தது. இதைதொடர்ந்து, பஜனை கோயில் சந்திப்பு, கங்கைகொண்டான் மண்டபம் உள்பட 14 முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் வேகத்தடை அமைக்கும் பணி தீரமாக நடக்கிறது. இதனால், சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள், மக்கள் நடமாட்டம் உள்ள 14 இடங்களில் அமைக்கப்பட்ட வேகத்தடையை கடந்து செல்லுபோது மெதுவாக செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல்துறை சார்பிலும், பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : locations ,vehicle accidents ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு