×

ராஜபாளையத்தில் ஏடிஎம்மில் அபாயமணி ஒலித்ததால் பரபரப்பு

ராஜபாளையம், மார்ச் 3: ராஜபாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தின் அபாயமணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் தென்காசி சாலையில் இயங்கும் தேசிய வங்கியின் ஏடிஎம் மையங்கள் மதுரை சாலை, தென்காசி சாலை, சங்கரன் கோயில் சாலை, சத்திரப்பட்டி சாலை, டி.பி மில்ஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளது. நேற்று பகல் ஒரு மணி அளவில் ரயில் நிலையம் எதிரே இயங்கும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து திடீரென அபாயமணி ஒலித்தது. அருகில் இருந்தவர்கள் பார்த்த போது மையத்திற்குள் யாரும் இல்லாதது தெரிய வந்தது. இதனால் பணம் எடுக்க வந்தவர்கள் மையத்திற்குள் நுழையாமல் திரும்பிச் சென்றனர்.அபாயமணி அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். நேரில் வந்து பார்த்த காவலர்கள் அளித்த தகவலின் பேரில், மையத்திற்கு வந்த வங்கி ஊழியர் அபாயமணியை கட்டுப்படுத்தினார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக அபாயமணி ஒலித்திருக்கலாம் என வங்கி ஊழியர் தெரிவித்தனர். அபாய மணி ஒலித்ததால் ரயில் நிலைய பகுதி மற்றும் டி.பி. மில்ஸ் சாலையில் சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : ATM ,Rajapalayam ,
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...