×

புத்திரகவுண்டன்பாளையத்தில் 15ம் தேதி ஜல்லிக்கட்டு விழா

ஆத்தூர், மார்ச் 3: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா  புத்திரகவுண்டன்பாளையம் கிராமத்தில் வரும் 15ம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா நேற்று முன்தினம் புத்திரகவுணடன்பாளையத்தில் உள்ள ரியல் எஸ்டேட் மைதானத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சின்னதம்பி எம்எல்ஏ, ஏத்தாப்பூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அப்பாவு, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் ஆத்தூர், சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஜல்லிக்கட்டு காளைகள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளன. மேலும், மாடு பிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : Jallikattu Festival ,
× RELATED மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு...