×

காடையாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

காடையாம்பட்டி, மார்ச் 3: காடையாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி ஜமுனா(29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை, ஜமுனா தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூசாரிப்பட்டி சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலம் பகுதியில் இருந்து ஹெல்மெட் அணிந்தவாறு பைக்கில் வந்த 2 பேர், வழிகேட்பதுபோல் ஜமுனா அருகில் நெருங்கியுள்ளனர். திடீரென அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால், திடுக்கிட்ட ஜமுனா கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் மர்ம ஆசாமிகள் 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், தப்பிய நபர்கள் குறித்து பூசாரிப்பட்டி பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில், பட்டப்பகலில் நடைபெற்ற சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : National Highway ,Kadayampatti ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!