×

ஓமலூர் அருகே ₹15 லட்சத்தில் மகளிர் சுகாதார வளாகம்


ஓமலூர், மார்ச் 3: ஓமலூர் அருகே ₹15 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகளை பார்த்திபன் எம்.பி. துவக்கி வைத்தார். ஓமலூர் அருகே கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள குள்ளமநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தங்கராஜ் முயற்சியில், அப்பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர்களின் நிதியுதவியுடன் பெண்களுக்கென கழிப்பிடம் கட்டுவதற்கு இடம் வாங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கழிப்பிடம் மற்றும் சுகாதார வளாகம் கட்டுவதற்காக பார்த்திபன் எம.பி. ₹15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பூமி பூஜையில் பார்த்திபன் எம்.பி. கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். மேலும், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில்திமுக ஒன்றிய செயலாளர் குப்புசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி தனசேகரன், மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி, துணை தலைவர் மகாலட்சுமி, ஊராட்சி செயலர் காசிலிங்கம், முருகன், உலகு உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags : Omalur ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!