×

ஏற்காட்டில் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முகாம்

ஏற்காடு, மார்ச் 3:ஏற்காடு ஒன்றிய கவுன்சிலர் கலைவாணி ஏற்பாட்டின்பேரில், நடந்த முகாமில் ஏற்காடு டவுன் பஞ்சாயத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள், மற்றும் சான்றுகள் பெறப்பட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது. ஏற்காடு டவுன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட காப்பீடு திட்ட அட்டைககளை வழங்கினார். இம்முகாமில், ஏற்காடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆறுமுகம், வினோத் குமார், பாபு, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : Camp ,Yercaud ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு