×

ஊரை காலி செய்து கிராம மக்கள் திருப்பதி பயணம்

காவேரிப்பட்டணம், மார்ச் 3: செட்டிமாரம்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து திருப்பதிக்கு சென்றனர்.
காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமக்கள் விரதமிருந்தது திருப்பதிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று 15க்கும் மேற்பட்ட பஸ்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு சென்றனர். ஊர் கவுண்டர் மாரியப்பன் தலைமை வகித்து பக்தர்களை அழைத்து சென்றார்.  

காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கலந்துகொண்டு பொதுமக்களை கோவிலுக்கு வழியனுப்பி வைத்தார். கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று செட்டிமாரம்பட்டி கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : city ,Tirupati ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்