×

தாந்தோணிமலையில் 29ம் தேதி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

கரூர், மார்ச் 3:கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகே முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இந்தாண்டுக்கான பங்குனி விழா நடைபெறுவது குறித்து, ஊர்முக்கியஸ்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் சார்பில் கோயில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மார்ச் 29ம்தேதி அன்று பங்குனி விழாவினை முன்னிட்டு கம்பம் நடுதல் நிகழ்வும், ஏப்ரல் 3ம்தேதி பூச்சொரிதல் விழாவும், 5ம்தேதி பகவதியம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்வும், 6ம்தேதி திருத்தேரோட்டம், 7ம்தேதி அக்னி சட்டி, பால்குடம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட்டு, ஏப்ரல் 9ம்தேதி அன்று மாலை வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Panguni Uthra Festival ,Muthumariyamman Temple ,
× RELATED புதுக்கோட்டை அடுத்த வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் ரத ஊர்வலம்