×

கரூர் திருமாநிலையூர் காட்டுவாய்க்காலில் கழிவுகளைஅகற்றி தூர்வார கோரிக்கை

கரூர், மார்ச் 3: கரூர் திருமாநிலையூர் அருகே உள்ள காட்டு வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் தண்ணீர் தேங்கி கிடப்பதை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருமாநிலையூர் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிரே சாலையோரம் காட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீருடன், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளும் சேர்ந்து தேங்கி கொள்கிறது. இதனால், குறிப்பிட்ட வாய்க்காலம் பாலம் அருகே கழிவுகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்பதால் மற்ற பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. மேலும், இந்த பகுதியின் அருகே குடியிருப்புகளும் உள்ளன. இந்த தண்ணீர் தேக்கம் காரணமாக அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த காட்டு வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் சீராக செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Karur Thirumanthiyur Thiruvananthapuram ,
× RELATED கவிஞர்கள் நாள் விழாவை முன்னிட்டு...