×

கொள்ளிடம் புத்தூர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

கொள்ளிடம், மார்ச் 3: நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பட்டவகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் லெட்சுமி தலைமை வகித்தார். முனைவர் கணேசன் வரவேற்றார். பயிற்சியில் பன்னாட்டு மனிதவள மேம்பாட்டு பயிற்றுநர் முனைவர்கள் மகேஸ்வரன், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர். எதிர்கால வாழ்க்கையில் லட்சியங்களை தூண்டும் வகையிலும் மாணவர்கள் வாழ்க்கையில் குறிக்கோளை அடைய மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் நடைமுறை பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் சசிகுமார் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கபடி விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் லெட்சுமி கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Training Camp ,Kalutti ,Government College ,
× RELATED ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும்...