×

சீர்காழி சட்டநாதபுரம் பள்ளியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்


சீர்காழி, மார்ச் 3: சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ராசா, தமிழரசி, அமுத செல்வி, சாந்தி, மஞ்சுளா, லதா, கவிதா, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் விசாகர் வரவேற்றார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உஷா நந்தினி பிரபாகரன் ஆகியோர் மாணவர்களுக்கு நோட்டு எழுது பொருட்களை வழங்கி பேசினர். இதில் திமுக நிர்வாகிகள் பன்னீர்செல்வம், முத்துக்குமார், சேகர், வேலாயுதம், கல்யாணம், தனுசு செல்வம், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sirkazhi Chatanathapuram School ,
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்