×

வயிற்றுவலியால் அவதி பெண் தீக்குளித்து தற்கொலை

பெரம்பலூர்,மார்ச்3: பெரம்பலூர் அருகே தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை ெசய்து கொண்டார். பெரம்பலூர் அருகே லாடபு ரம், தேவேந்திரகுல வேளா ளர் தெருவைச் சேர்ந்த இடும்பன் என்பவரது மனைவி லட்சுமி(50). இவர் 1ம்தேதி காலை, தனது கூரை வீட் டின் தாழ்வாரத்தில் இருந்தபடி, வீட்டில் இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெ யை எடுத்து உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். இவருக்கு சர்க்கரை நோயால் வலது கால் நட க்க முடியாததால் நகர்ந்து செல்லக் கூடியவர். தற்போது கால்வலி மற்றும் வயிற்று வலி காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றித் தீவைத் துக்கொண்டார். ஆபத்தா ன நிலையில் மீட்கப்பட்டு பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டஇவரிடம், பெர ம்பலூர் மாவட்டக் குற்றவி யல் நீதிமன்ற நீதிபதி மரண வாக்குமூலமும் பெற்றுள்ளார்.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச் சை பெற்றுவந்த லட்சுமி மேல் சிகிச்சைக்காக திரு ச்சிமாவட்ட அரசுத் தலை மை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(2ம்தேதி) அதிகாலை 3.15 மணியளவில் இறந்தார்.இதுகுறித்து, பெரம்பலூர் எஸ்ஐ செந்தமிழ்ச்செல்வி விசாரணை நடத்–்தி வருகிறார்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா