×

குன்னம், ஆலத்தூர் தாசில்தார்கள் நியமனம்

பெரம்பலூர், மார்ச் 3: பெரம்பலூர் மாவட்டத்தில் 5 தாசில்தார் பணியிடங்களை பணிமாறுதல் செய்து கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். இதன்படி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியம், ஆலத்தூர் தாசில்தாராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஷாஜகான், கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தாராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் குன்னம் தாசில்தாராக பணிபுரிந்து வந்த சித்ரா, பெரம்பலூர் பறக்கும்படை தாசில்தாராகவும், குன்னத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த சின்னதுரை, குன்னம் தாசில்தாராகவும், ஏற்கனவே பறக்கும் படை தாசில்தாராக பணிபுரிந்து வந்த வனிதா, குன்னம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது பொறுப்பேற்று பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

Tags : Kunnam ,Alathur Dasildars ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...