குளத்தூர், மார்ச் 3: குளத்தூர் அருகே உள்ள பனையூர் இந்துநாடார் நடுநிலைப்பள்ளியில் அறிவியல் இலக்கிய மன்றவிழா நடந்தது. கல்வி சங்க தலைவர் தாளமுத்து தலைமை வகித்தார். கிராம தலைவர் சின்னச்சாமி, துணை தலைவர் பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மரியஅனிதா வரவேற்றார். சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அறிவியல் மன்ற பொறுப்பாசிரியை காந்திக்கனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் அறிவியல் குறித்த விழிப்புணர்வு நாடகம், பட்டிமன்றம், ஆடல் பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அறிவியல் மன்றம் சார்பில் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.