×

சிவபெருமான் புகைபிடிப்பதுபோல் பேனர் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்

கும்பகோணம், மார்ச் 3: சிவபெருமான் புகைபிடிப்பதுபோல் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி புகார் மனு அளித்தது.
திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பாலா புகார் மனு அளித்தார். அதில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி மாசிமாத மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி கும்பகோணம் அடுத்த பிள்ளையாம்பேட்டை வீரசோழன் ஆற்றின் தென்கரையில் காசி விஸ்வநாதர் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவையொட்டி பக்தர்களை வரவேற்கும் விதத்தில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. அதில் சிவபெருமான் புகைபிடிப்பது போல் ஒரு காட்சியை படமாக சித்தரித்து வைத்துள்ளனர். இந்த செயல் சிவபக்தர்கள், சிவனடியார் மற்றும் இந்து கடவுளின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு பெரும் அச்சம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே சிவபெருமானை தவறாக சித்தரித்து விளம்பர பதாகை வைத்திருந்தவர்கள் மீதும், பதாகையை அச்சிட்ட அச்சக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி முடிவு
கடந்த காலங்களில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு கரும்பு ஆலை நிர்வாகம் பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால் 6 ஆயிரம் விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை விட்டு விட்டு  நெல் சாகுபடிக்கு மாறிவிட்டனர்.

Tags : Shiva ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...