×

ஊராட்சி முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கும்பகோணம், மார்ச் 3: கும்பகோணம் அடுத்த கொரநாட்டுக்கருப்பூரை சேர்ந்தவர் அபிராமிசுந்தரம் (65). திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். சின்ன கரூப்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (50). முன்னாள் ஊராட்சி தலைவர்.
இருவருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை. இதனால் கிருஷ்ணமூர்த்தி, அபிராமிசுந்தரத்தின் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 23ம் தேதி அபிராமிசுந்தரத்தை கிருஷ்ணமூர்த்தி தாக்கினார். இதனால் கிருஷ்ணமூர்த்தியை கட்சியிலிருந்து நீக்கினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது கிருஷ்ணமூர்த்தி முன்விரோதம் காரணமாக அபிராமிசுந்தரத்தை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றனர்.  ஆனால் அங்கிருந்து கிருஷ்ணமூர்த்தி தப்பியோடி விட்டார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் அபிராமிசுந்தரம் புகார் செய்தார். அதன்போில் கிருஷ்ணமூர்த்தியை கைது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : murder ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...