×

நகராட்சி, பேரூராட்சிக்கு 100 நாள் ேவலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் தலித் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

குமாரபுரம், மார்ச் 3:தக்கலையில் குமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். அருண்ஜாண்சன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஸ்டீபன், இம்மானுவேல், சரோஜா, சரோஜினி, முத்தம்மாள், லீலா, கோமதி, லீலாபாய் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், ஏப்.14ம் தேதி அம்பேத்கார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அன்று தக்கலை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது, தக்கலையில் உள்ள கல்குளம் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் போதிய பணியாளர்களை நியமிக்க கேட்பது, குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் குறைவு விவசாய கூலி தொழிலாளர்களின் வேலையின்மையை கருத்தில் கொண்டு 100 நாட்கள் வேலை திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த கேட்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : People's Alliance ,
× RELATED மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசுக்கான...