×

இ.கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

மஞ்சூர், மார்ச் 3: மஞ்சூரில் இ.கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  ஊட்டி தாலுகா இ.கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் மஞ்சூரில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு அலியார் தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் முரளிதரன், இ.கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா நிர்வாகி சுப்ரமணி, விவசாயிகள் சங்க செயலாளர் மாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்னூர் தாலுகா செயலாளர் ஆல்துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாசு, ராஜேந்திரன், சங்கரலிங்கம், பாஸ்கரன் ஆகியோர் பேசினர். நீலகிரி மாவட்டத்தில் 281 இடங்களில் வீடு கட்டவும், வீடுகளை பழுது பார்க்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பல தலைமுறைகளாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்–்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Explanatory Meeting ,Communist ,
× RELATED மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக...