×

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

கோவை, மார்ச் 3:    கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் பார்சல் அலுவலகம் செல்லும் ரயில் பாதை அருகில் கடந்த ஜனவரி மாதம் 30ம்  தேதி சுப்ரமணியன் என்பவர் நின்றிருந்தார். அப்போது கோவை சுங்கம் பைபாஸ் ரோடு தியாகி சிவராம் நகரை சேர்ந்த பிரமோத்குமார் (23) கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி சுப்ரமணியத்திடம் இருந்து பணம் பறித்தார். இவ்வழக்கில் பிரமோத்குமாரை கோவை ரயில்வே போலீசார் கைது செய்தனர். பிரமோத் குமார் மீது ஏற்கனவே சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், பெரம்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் ஒரு வழக்கும்  உள்ளது. ரவுடியான இவர் பல்வேறு இடங்களில் தகராறு செய்து வந்துள்ளார். பிரமோத்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதன்படி அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags : Rowdy ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...