×

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பூஜை

திருப்பூர், மார்ச் 2: திருப்பூரில் அரசு பொதுத்தேர்வை எழுதவிருக்கும் பள்ளி மாணவர்களுக்காக பெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு நினைவாற்றல், தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர் கொள்ளவும், அதிகமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டியும் திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்கிரீவருக்கு ஆண்டு தோறும் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படும். அவ்வகையில் நேற்று காலை முதல் மாலை வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. யாக வேள்வி, அபிஷேகம், நாம சங்கீர்த்தனத்தோடு, பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் பெயர், நட்சத்திரங்களுக்கு தனித்தனியே அர்ச்சனை செய்யப்பட்டது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.


Tags : general election ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் உடனே வாக்களிக்க அனுமதி