×

பந்தலூர் அருகே யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி

பந்தலூர், மார்ச் 2: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை புலிகள் காப்பகம் பகுதி பென்னை ஆதிவாசி காலனியில் வசித்துவருபவர் கூலித்தொழிலாளி விஜயன்(28). இவர் நேற்று முன்தினம் இரவு பாட்டவயல் பகுதியில் இருந்து பென்னை பகுதியில் உள்ள தனது குடியிருப்பிற்கு செல்லும்போது வனப்பகுதியில் இருந்து குறுகிட்ட காட்டு யானை ஒன்று விஜயனை தாக்கிய சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நெலாக்கோட்டை புலிகள் காப்பக ரேஞ்சர் சுரேஷ் மற்றும் வனத்துறையினர், காவல்துறையினர் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில், வனத்துறை சார்பில் முதல் கட்ட இழப்பீடு தொகை ரூ.50 ஆயிரத்தை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் செண்பகபிரியா உத்தரவுபடி ரேஞ்சர் சுரேஷ் விஜயனின் தந்தை பொள்ளனிடம் நேற்று வழங்கப்பட்டது.

Tags : elephant attacker ,Bandalur ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா