×

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் 3ம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கோவை, மார்ச் 2: கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் 3ம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. இதை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜூனன், பிஆர்ஜி அருண்குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் செல்வராஜ், கலெக்டர் ராசாமணி, போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறுகையில், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கடந்த 17ம் தேதி அன்று அரசின் 3 ஆண்டுகள் சாதனைகளை புத்தகமாகவும், குறும்படமாகவும் முதல்வர் வெளியிட்டார்கள். இன்றைக்கு  ‘முத்திரை பதித்த மூன்று ஆண்டு முதல் இடமே அதற்கு சான்று’ என்னும்  தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், குறிப்பாக கோவை மாவட்டத்தில் செயலபடுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவ்ற்றின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Anniversary Photo Exhibition ,Gandhipuram Bus Stand ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்