×

கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் லட்சார்ச்சனை

ஈரோடு, மார்ச் 2:   ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோயிலில் வரும் 8ம் தேதி லட்சார்ச்சணை நடைபெற உள்ளது. லட்சார்ச்சனையொட்டி அன்று காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம் (கோ பூஜை), காலை 6.30 மணி முதல் 7 மணி வரை ஸ்ரீ கமலவல்லித் தாயாருக்கு திருமஞ்சனம், காலை 8 மணிக்கு முதற்கால லட்சார்ச்சனை துவங்கி தேவதா அனுக்ஞை, விஷ்வக்ஸேந அபிஷேகம், மகாலட்சீமி ஹோமம், பூர்ணாகுதி, சாற்றுமறை, தீபாராதனையும், காலை 10 மணிக்கு இரண்டாம் கால லட்சார்ச்சணையும், மாலை 4.30 மணிக்கு மூன்றாம் கால லட்சார்ச்சனையும், மாலை 6.30 மணிக்கு நான்காம் கால லட்சார்ச்சனையும் நடக்கிறது. நான்காம் கால லட்சார்ச்சனை முடிந்து தீபாராதனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை ஊழியர்கள் செய்து வருகின்றனா்.

Tags : Fort Kasturi Aranganatha Temple ,
× RELATED காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள்...