×

ஏ.டி.எம் இயந்திரம் சேதம்: வாலிபர் மீது வழக்கு

ஈரோடு, மார்ச் 2:   ஈரோடு  மாவட்டம் கோபி அருகே வெள்ளாங்கோவில் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ்  வங்கியின் கிளை அலுவலகம் செயல்படுகிறது. இந்த வங்கியின் அருகிலேயே  ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. கடந்த 10ம் தேதி மாலை 5 மணிக்கு ஏ.டி.எம். இயந்திரம்  சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளது. இதுதொடர்பாக வங்கியின் கிளை மேலாளர்  சபரிகிரீசன் சிறுவலூர் போலீசில் அளித்த புகாரின் பேரில்,  போலீசார் வழக்குப்பதிந்து, ஏ.டி.எம்  மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில்  ஒரு நபர் பணம் எடுக்க முடியாத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை கல்லால்  தாக்கி உடைப்பது தெரிய வந்தது. அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி  (36) என தெரிய வந்தது. கவுண்டமணியை போலீசார் தேடி  வருகின்றனர்.

Tags : plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...