×

அதிகமாக மது அருந்தியவர் சாவு

சென்னை, மார்ச் 2: வில்லிவாக்கம், ராஜாஜி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). தனியார் கம்பெனி ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு அயனாவரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த அயனாவரம் போலீசார், கிருஷ்ணமூர்த்தியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : alcoholic ,
× RELATED சிறுவர்களுக்கு கல்வி உதவி செய்யும்...