×

முத்துப்பேட்டை அருகே லாரி மோதி பெண் படுகாயம்

முத்துப்பேட்டை, மார்ச் 2: முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் பெத்தன்கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்(62). இவர் தனது மனைவி தமிழரசியுடன் (45)பைக்கில் தில்லைவிளாகம் உறவினர் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். கோபாலசமுத்திரம் சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி பைக்கை இடிப்பது போல் அணைத்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தமிழரசிக்கு தலையில் பலத்தை காயம் ஏற்பட்டது. ராஜேந்திரன் சிறுகாயத்துடன் தப்பினார்.

இதனையடுத்து தமிழரசி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சின்னாலப்பட்டி கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜீ மகன் சேதுராமன்(54) என்பவரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு