×

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் தர்ணா

காஞ்சிபுரம், மார்ச் 2: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும்  காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் நினைவுத்தூண் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளை தலைவர் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பட்டூர் ஆசார் வரவேற்றார். நிர்வாகிகள் அப்துல் பாரி, முகமது ஆரூண், அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த தர்ணா போராட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் என்பிஆர் கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.




Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...