×

வேட்டூர் கிராமத்தில் திமுக கிளை கழக தேர்தல்

செய்யூர், மார்ச் 2: திமுக கிளை செயலாளர்களுக்கான தேர்தல் வேட்டூர் கிராமத்தில் நேற்று நடந்தது.திமுக கட்சியின் 15வது உட்கட்சி கிளை செயலாளர்களுக்கான தேர்தல் கடந்த ஒருவார காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஜமீன் எண்டத்தூர், கினார், ஓணம்பக்கம், வேட்டூர், ஜமீன் புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 186 கிளை செயலாளர்களுக்கான தேர்தல் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. தேர்தல் பொறுப்பாளர் காஞ்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுகுமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வேட்டூர் ஊராட்சியில் கிளை செயலாளர்களுக்கான  உட்கட்சித் தேர்தல் நடந்தது. இந்த ஊராட்சியில் மொத்தமுள்ள 5 கிளை செயலாளர் பதவிகளுக்கு மொத்தம் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் எதிர்த்து மனு தாக்கல் செய்யப்படாததால் 5 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கிளை துணை செயலாளர்களுக்காக நடத்தப்பட்ட தேர்தலில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்த பல பெண்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் தரன், கட்சி நிர்வாகிகள் ராஜா ராமகிருஷ்ணன், வெங்கடேசன், தணிகையரசு, பத்மா செல்வராஜ், கிணறு அரசு, சசிகுமார், முத்தையா, சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Tags : DMK ,branch election ,village ,Vettur ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு